ஒப்பந்தத்தை திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்பத் தயார் : உயர்நீதிமன்றத்தில் சிஐடியு அறிவிப்பு

ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் ஒப்பந்தத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டால், பணிக்குத் திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 10

ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் ஒப்பந்தத்தை அரசு திரும்ப பெற்றுக் கொண்டால், பணிக்குத் திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தொழிற்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். திமுக உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெரும்பாலான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளது. தமிழக அரசும் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. 

வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, ரூ.750 கோடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், ரூ. 7,000 கோடி நிலுவைத்தொகை உள்ள நிலையில், ரூ. 750 கோடி ஏற்க முடியாது என்று கூறிய தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்தனர்.

இந்நிலையில், வேலைநிறுத்த வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நோட்டீஸ் அளித்த பின்னரே தற்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம் என்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வாதாடப்பட்டது. 

அரசின் ஊதிய ஒப்பந்தத்தில் 32 தொழிற்சங்கங்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு காரணம் அரசுதான், ஊழியர்கள் இல்லை என்று கூறிய சிஐடியு வழக்கறிஞர், நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாகவே தெரிவித்தார். ஓராண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்துள்ளதாக தொமுச வழக்கறிஞர் வாதிட்டார். ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக சிஐடியு தெரிவித்தது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...