பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி சிறப்பு விடுமுறை

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 12ம் தேதி சிறப்பு விடுமுறையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 10

ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் 12ம் தேதி சிறப்பு விடுமுறையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்துகள் முழு அளவில் இயங்கவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். பள்ளி செல்லும் மாணவர்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். பள்ளிக்கு நீண்ட தொலைவு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். போராட்டம் முடிவுக்கு வராத நிலையில், சிறப்பு நிகழ்வாக அனைத்துப் பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன்மூலம், வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக கலாச்சாரம், பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...