நீலகிரியில் பொதுமக்களை வாட்டி எடுக்கும் கடும் குளிர் : விடுதிகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சுற்றுலாப் பயணிகள்

உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி, ஜனவரி 10

உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டத்தில் இன்று மதியம் திடீரென லேசான மழை பெய்தது. இதனால், ஏற்பட்ட குளுமையான சீதோஷன நிலையை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், மாலை வேளையில், கடும் குளிர் வாட்டி எடுத்தது. குன்னூரில் ஜுரோ டிகிரியும், உதகையில் -1 டிகிரி அளவிற்கு கடுமையான குளிர் நிலவியது. பொதுமக்கள், சீக்கிரமாகவே வீடுகளுக்கு முடங்கினர். மேலும், கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால், நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒருசில இடங்களில், டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் விறகுளை வைத்து தீ மூட்டிக் குளிர் காய்ந்தனர். 

உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை காட்சிகளை ரசிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு குளிரின் அளவு அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...