விளம்பர சுவர்களாக மாறி வரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.


கோவை, ஜனவரி 11

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுப்புறத்தையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம் தனக்கான கட்டிடத்தைத் தூய்மையாக வைக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.



இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் தற்போது பெருகிவருகிறது. இதனைத் தடுக்க கோவை மாநகராட்சி சில வருடங்களுக்கு முன்பு அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தை முதலில் சங்கங்கள் ஆரம்பித்தன. அதன் பின் தற்போது பல்வேறு தரப்பினரும் இதனைப் பின் தொடர்ந்து வருகின்றனர். இது போன்ற போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவர்களை ஈர்க்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுக்கின்றன. இதனால் கட்டிடத்தின் அழகு சீர்குலைந்து முகம் சுலிக்க வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...