மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா தாக்கல்

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

ஜனவரி 11

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை கடந்த 2015-ம் ஆண்டு வரை நேரடியாக மக்களே தேர்வு செய்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, இந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களின் பெரும்பான்மை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்யும் முறை தற்போது அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவருவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டசபை இன்று தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்ய இந்த மசோதா வகை செய்கிறது.

தனி அதிகாரிகளின் பதவிகாலம் நீட்டிப்பு

முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதாவும் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...