கோவை விழாவையொட்டி பம்பு செட்டுகளைக் கொண்டு பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி

கோவையில் உள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்த பம்புசெட்டுகளைக் கொண்டு, ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 11

கோவையில் உள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்த பம்புசெட்டுகளைக் கொண்டு, ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. 



கோவையில் உள்ள பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் 10-வது ஆண்டு கோவை விழா, கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக கோவையில் உள்ள பம்புசெட் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்த பம்புசெட்டுகளைக் கொண்டு, ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பெயர் வடிவமைக்கும் நிகழ்ச்சி, வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது. 

அதில், கோவையில் உள்ள முன்னணி பம்புசெட் உற்பத்தியாளர்களான ஆக்வாடெக்ஸ் மற்றும் டெக்ஸ்மோ, எக்கி மற்றும் டெக்கான் பிராண்ட்ஸ், மகேந்திரா பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ், ஐடியல் பம்ப்ஸ், ஓம் முருகன் இன்டஸ்டிரியல்ஸ், பி.எஸ்.ஜி. பம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பம்புசெட்டுகளை ‘கோயம்புத்தூர் தி பம்பு சிட்டி ஆப் ஆசியா’ என்று பிரமாண்டமாக வடிவமைத்தனர். 



இது குறித்து எக்கி குரூப்ஸ் கனிகா ஆறுமுகம், ஓம் முருகன் இன்டஸ்டிரியல்ஸ் கார்த்திகேயன், மகேந்திரா பம்ப்ஸ் மிதுன் ராமதாஸ் ஆகியோர் கூறியதாவது:- ஆசிய கண்டத்தில் அதிகளவில் பம்புசெட் உற்பத்தி செய்யும் நகரமாக கோவை விளங்குகிறது. முன்னணி பம்புசெட் நிறுவனங்கள் கோவையில்தான் உள்ளன. 

தொழிற்பேட்டைகள் 

60 ஆண்டுகளுக்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு கோவையில் பம்புசெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் இருந்து பம்புசெட் மாடல்கள் கொண்டுவரப்பட்டு இங்கு உற்பத்தி செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பம்புசெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தரமான பம்புசெட்டுகளை உருவாக்கும் சூழல் கோவையில் உள்ளது. 

200 நிறுவனங்கள் 

 

கோவையில் 200 சிறு, நடுத்தர மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இது நாட்டின் தேவையில் 40 சதவீதம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக அகமதாபாத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் பம்புசெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலக பம்புசெட் உற்பத்தி சந்தையில், இந்தியா 10,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்கிறது. இதில், கோவையில் பங்களிப்பு அதிகமாகும். உலக பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதற்கு குறைந்த செலவில் தரமான பம்புசெட்டுகளை உற்பத்தி செய்வதும் ஒரு காரணமாகும்.

உலக சந்தையில் சவால் :

இதற்கான நேர்மறையான சூழல் கோவையில் நிலவுகிறது. பொறியியல் உற்பத்தி திறன், அதிக சப்ளைக்கான வாய்ப்புகள் இங்கு உள்ளன. விவசாயத்திற்கு அதிகரித்து வரும் தேவையால், தொழில் நிறுவனங்களில் பம்புசெட் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வருங்காலங்களில் சவால்கள் அதிகரிக்கும் என்பதால், உலக சந்தையில் போட்டியிடும் வகையில் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

நிகழ்ச்சியில் யங் இந்தியன்ஸ் தலைவர் பிரசன்னா, துணைத்தலைவர் வி~;ணு உள்பட தொழில்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சின்னம் வடிமைக்கும் நிகழ்ச்சி



கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக பி.எஸ்.ஜி. நிறுவனங்கள் சார்பில், 9 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்படி பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளி சார்பில் கோவை விழா சின்னம் வடிவமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 450 மாணவ, மாணவிகள் ‘கோயம்புத்தூர் விழா’ என்று நின்று அசத்தினர். 

இன்றுடன் நிறைவு

கோவையில் கடந்த ஒருவாரமாக நடைபெற்ற கோவை விழா நாளையுடன் (12-ந் தேதி) நிறைவு பெறுகிறது. இதையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, மூத்த குடிமக்களின் யோகாசன நிகழ்ச்சி, சிலம்பாட்டம், கோயம்புத்தூர் வட்டார நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...