வால்பாறை அருகே சிறுத்தை தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை, ஜனவரி 12

வால்பாறை அடுத்த சவரங்காடு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வால்பாறை அடுத்த காமராஜநகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர், தனது கால்நடைகளான பசு மற்றும் காளை மாடுகளை அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் உணவிற்காக மேயவிடுவது வழக்கம். 

இவ்வாறு நேற்று எஸ்டேட் பகுதியில் மாடுகள் சென்றிருந்த நிலையில் மாலை காளை மாடு மட்டும் திரும்பி வரவில்லை. இதனைத்தொடர்ந்து, அன்பழகன் அருகில் உள்ள சவரங்காடு எஸ்டேட் பகுதியில் தேடியபோது அங்கு மாடு கழுத்தில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது.



இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரி சக்திவேல் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டார். அப்போது, சிறுத்தையின் காலடித் தடங்கல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுத்தை தாக்கியதாலேயே காளை மாடு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதனிடையே சவரங்காடு எஸ்டேட் பகுதி மக்கள், இந்த சிறுத்தை கடந்த சில நாட்களாக குடியிருப்புகளின் அருகில் சுற்றித் திரிவதாகவும், இதனால் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் அதனைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் எனவும் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...