ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு கிடையாது : தமிழக அரசு அறிவிப்பு

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

ஜனவரி 12

விலை உயர்ந்துவிட்டதால் ரேஷன் கடைகளில் இனி உளுந்தம் பருப்பு வழங்க முடியாது என சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

சட்டசபையில் இன்று தி.மு.க. உறுப்பினர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், பள்ளிப்பட்டு, கானகம் ஆகிய இடங்களில் புதிய நியாய விலை கடை அமைக்க வேண்டும் என்றார். மேலும், ரே‌ஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர வேண்டும் என வலியுறுத்தினர். 

எதிர்கட்சி எம்எல்ஏவின் இந்தக் கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ரே‌ஷன் கடைகளில் மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 கோடியே 52 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போது, 1 கோடியே 95 லட்சம் ரே‌ஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை அப்போது வெளி மார்க்கெட்டில் குறைவாக இருந்தது.

ஆனால், இப்போது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மத்திய அரசு மானியமும் இப்போது நிறுத்தி விட்டனர். எனவே, ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் செய்ய இயலாது. துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. மானியத்தை ஈடுகட்ட அரசுக்கு மாதத்திற்கு ரூ.207 கோடி செலவாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...