பொங்கல் பண்டிகைக்கு கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கக் கோரி பெற்றோர்கள் கோரிக்கை

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை, ஜனவரி 12

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்து கொள்ள பொங்கல் பண்டிகையின் போது மாநில கல்வி வாரியம் அளிக்கும் விடுமுறைகளைப் போலவே கேந்தரிய வித்யாலயா பள்ளிகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மத்திய அரசின் சார்பில் 46 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் கேந்திரிய பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழுந்தைகளுக்கு இந்த பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். 

கோவையில், சவுரிபாளையம் மற்றும் சூலூர் ஆகிய இரண்டு இடங்களில் கேந்தரிய வித்யாலயா பள்ளிகளானது செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 45 கேந்தரிய பள்ளிகளுக்கு ஜனவரி 15-ம் தேதி மாட்டுப்பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளதைப் போல பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையை மத்திய கல்வி வாரியத்திற்கு உட்பட்ட தமிழக பள்ளிகளுக்கும் அளிக்க வேண்டும் என கேந்தரிய வித்யாலயா பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் தெரிந்துகொள்ள குழந்தைகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தமிழகத்திற்கு சம்மந்தமில்லாத குருகோவிந்சிங் பிறந்தநாள், மகாவீர் ஜெயந்தி, ஜென்மாஸ்டமி, குரு நானக் பிறந்த நாள், கோவர்தன் பூஜா, புத்த பூர்ணிமா போன்ற தமிழகத்திற்கு சம்பந்தமில்லாத நாட்களில் விடுமுறை அளிக்கப்படுவதைத் தவிர்த்து பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கேந்தரிய வித்யாலயா பள்ளிகளில் தசரா பண்டிகை, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதைப் போல பொங்கல் விழாவையும் கொண்டாட வேண்டும் எனவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...