டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்


கோவை, ஜனவரி 12

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊர்காவலர் படை வீரர்கள் (கோவை மாநகரம்) மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பினருக்கு, கோவை மாநகராட்சி ஆணையர் மரு. க. விஜயகார்த்திகேயன் இன்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில், கோவை மாநகராட்சியோடு இணைந்து 400 ஊர்காவலர் படை வீரர்கள் மற்றும் இன்னர் வீல் ஆஃப் கோயம்புத்தூர் அமைப்பைச் சேர்ந்த 70 தன்னார்வலர்கள் டெங்கு நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து டெங்கு நோய் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டன.



கோவை மாநகர ஊர்காவலர் படை சார்பாக தனசேகர், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய தளபதி மற்றும் தேன்மொழி ராஜாராம், மாநகர ஊர்க்காவல்படையின் பிராந்திய துணைத் தலைவர் ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.



மேலும், இன்னர் வீல் ஆஃப் கோயம்பத்தூர் அமைப்பின் தலைவர் சாந்தி ராஜசேகர், செயலாளர் பி. கஸ்தூரி வசந்தி, அமைப்பின் மேற்கு மண்டல தலைவர் அனு மெண்டா, செயலாளர் மனிஷா பாஜ்பாய், கிழக்கு மண்டலத்தின் தலைவர் மனிமேகலா. வி. ராஜ் மற்றும் செயலாளர் சாவித்ரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...