மாணவர் தற்கொலை விவகாரம்: ஆசிரியரிடம் முறையாக விசாரிக்க உறவினர்கள் கோரிக்கை

கோவை, ஜனவரி 12

கோவையில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் முறையாக விசாரணை நடத்தக்கோரி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். 



ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவரது மகன் ஜாபர் ஜெரின் (15). இவர் ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஜாபர் ஜெரின் மதியம் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவரை பள்ளியின் உதவியாளர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஜாபரை வீட்டுக்கு அழைத்து வந்த உதவியாளரிடம் பள்ளியில் என்ன நடந்தது? என்ற விவரத்தை மாணவரின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதற்கு பள்ளி தலைமையாசிரியரை வந்து சந்திக்கும்படி பள்ளி உதவியாளர் கூறியதாக தெரிகிறது. இந்த இடைவெளியில் வீட்டிற்குள் புகுந்த ஜாபர், கதவை தாழிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த ரத்தினபுரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஜாபரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், மாணவர் பள்ளியில் இருந்து எதற்காக திருப்பி அனுப்பப்பட்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய ஜாபரின் உறவினர்கள் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையரிடம் இதுகுறித்த மனுவினையும் அளித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...