சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றம்

ஜனவரி 12

ஆளுநர் உரையுடன் கடந்த திங்களன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளே ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டி.டி.வி தினகரன் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிக்கை, தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்டதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஆகிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். மேலும், துணை நிதிநிலை அறிக்கையை ஓ.பன்னீர் செல்வம் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார். இதில், போக்குவரத்துத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது.

எம்.எல்.ஏ.க்களுக்கான ஊதியத்தை 100 சதவிகிதம் உயர்த்தும் மசோதா, மேயர் மற்றும் நகரசபை தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வழி செய்யும் மசோதா, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பதவி நீட்டிப்பு மசோதா ஆகியவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. எம்.எல்.ஏ.க்கள் ஊதிய உயர்வை ஏற்க மாட்டோம் என்று கூறி தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, மீண்டும் தேதி குறிப்பிடாமல் இந்தக் கூட்டத்தொடரை சபாநாயகர் முடித்துவைத்து அவையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...