விதிமுறைக்கு உட்பட்டு விண்ணபித்தோர்க்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் இணைப்பு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


கோவை, ஜனவரி 12

விதிமுறைக்கு உட்பட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணபித்து உள்ளவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் இணைப்புகள்  வழங்கபடும்  என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வங்கி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர், கடன் கொடுக்கும் திட்டங்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். 

மேலும், கோவை காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டதால் 45 சதவீத போக்குவரத்து நெரிசல் குறைந்து இருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, காந்திபுரம் பேருந்து நிலையம் வெள்ளலூர் கொண்டு செல்லபட்டு அங்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட  இருப்பதாகவும் அதற்கான நிதிக்காக காத்திருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் எம்.எல்.ஏக்களின் சம்பள உயர்வு சட்டமாக அறிவிக்கப்பட்டுவிட்டது எனவும், சட்டமாக அறிவிக்கும் முன்னர் யாரும் இது குறித்து பேசவில்லை எனவும் அறிவித்த பின்னர் பேசுகின்றனர் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.  

ஊதியம் போதாமல் இருப்பதால் எம்எல்ஏ க்கள் இயங்குவதில் சிரமமாக இருக்கின்றது  என்றும்  அவர்கள் கேட்டதால் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கு ஆண்டிற்கு 25 கோடி மட்டும் செலவாகும் எனவும் தெரிவித்தார். எம்எல்.ஏ சம்பள உயர்வை வைத்து திமுகவினர் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய அவர், சம்பள உயர்வில்  விருப்பம் இல்லாத சட்ட மன்ற உறுப்பினர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு அதை அளித்து விடலாம் என்று கூறினார்..

சாலைகளை தோண்டாமல் குடிநீர் இணைப்பு வழங்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சாலையை சேதப்படுத்தி, சாலைகளின் குறுக்கே குழி தோண்டினால்  ஓப்பந்ததாரர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், மகளிர் கடன், மானியம் வழங்குவது, மானியமில்லா கடன், குறுகிய கால கடன் திட்டம் போன்றவை குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதாக தெரிவித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்தில் கடன் வழங்குவது குறித்து ஒன்றிய அளவில் முகாம்கள் நடத்த அதிகாரிகளுக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...