கோவையில் களைக்கட்டிய தமிழர் திருவிழா

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.


கோவை, ஜனவரி 15

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருவிழா என்ற பெயரில் நடைபெற்று வரும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரசித்து வருகின்றனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை, பீளமேடு பகுதியில் நயம் அமைப்பு சார்பில் தமிழர் திருவிழா என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.



இந்த நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. உறியடித்தல், இளவட்டக் கல் தூக்குதல், வழுக்குமரம், பானையில் தண்ணீர் சுமந்து செல்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.



தமிழர்களின் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், பாவைக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும், குழந்தைகள் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் உற்சாகமாகப் பயணம் செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளும் பொதுமக்கள் பார்வைக்கு வரவழைக்கப்பட்டு இருந்தன.



கிராமங்களில் நடைபெறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை நகரத்தில் முதல் முறையாக பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இளம் தலைமுறையினரும் நமது கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர். இக்கலைகள் அழியாமல் இருக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

இந்ந நிகழ்ச்சியில் இதுவரை சுமார் 50 ஆயிரம் பேர் வரை பார்வையிட்டு இருப்பதாகவும், பொதுமக்களிடம் அமோக வரவேற்பு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கங்கா தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...