நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா சங்கர் விருது

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

ஜனவரி 15

தமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.வாசன் விருது இசைஞானி இளையராஜாவுக்கும், சிறந்த படத்திற்கான விருது அறத்திற்கும் என நகைச்சுவை, சிறந்த நடிப்பு, இயக்கம் என திரையுலகில் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் பாகுபலி படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் சத்யராஜூக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே இந்த விழாவின் போது, உடுமலையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர் நினைவாக நடிகர் சத்யராஜூக்கு கவுசல்யா- சங்கர் விருதும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து சத்யராஜூக்கு விருது வழங்கிய கவுசல்யா கூறுகையில், நடிகராக மட்டும் இல்லாமல் சாதிய அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவர் சத்யராஜ். தற்போதைய பெரும்பாலான நடிகர்கள் தனது தொழிலை மட்டும் பார்த்து வரும் நிலையில் சமுதாயத்தில் நிகழும் இன்னல்களைக் கண்டு, மக்களோடு மக்களாக நிற்கும் மனிதர்களில் ஒருவர் சத்யராஜ் என்றார்.

சத்யராஜ் இதுகுறித்து கூறுகையில், விழா ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விருது குறித்து முன்பே என்னிடம் தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போது வேறு ஏதேனும் மூத்த நடிகர்களின் கையால் இதனை பெறுவேன் என நான் நினைத்திருந்தேன். ஆனால், தற்போது கவுசல்யாவின் கையால் இந்த விருதினை பெறுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இச்சமூகத்தில் தனக்கு ஏற்பட்ட சாதிய அடக்குமுறைக்கு அடிபணிந்து இருக்காமல் அதனைத் தொடர்ந்து எதிர்த்து வரும் கவுசல்யா பாராட்டுக்குரியவர். இங்குச் சாதிய அடிப்படை கட்டமைப்புகளை மாற்றினால் மட்டுமே தெளிவான சமூகம் பிறக்கும். அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் கவுசல்யா போன்ற ஒவ்வொருவரும் போராளிகளே என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...