சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் ”சமத்துவப் பொங்கல்”

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை, ஜனவரி 16

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

வீரகேரளம் அருகேயுள்ள தோட்டத்தில் சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1997 ஆண்டு முதல் இன்று வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழாவின் போது ஒன்று கூடி சாதி, மதம் கடந்து பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 



இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் குண்டு ஆடுதல் முதல் பம்பரம், பட்டம் விடுதல், உரி அடித்தல் உட்பட பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு இல்லாமல் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்குப் பட்டம் செய்வது முதல் பறக்கவிடுவது வரை சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தாங்கள் வர முடியவில்லை என்றாலும் கூட தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களை அனுப்பி நண்பர்களின் குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடி மகிழ்ந்தனர். சொந்தகாரர்களுக்கு அழைப்பு இல்லாமல் நண்பர்களின் குடும்பம் மட்டுமே இணைந்து சமத்துவ பொங்கலை இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

சாதிய கொலைகள் பல அரங்கேறி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...