அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டை தடுத்து நிறுத்தம் : வாக்குவாதத்தால் பதற்றம்

கோவையில் அனுமதியின்றி நடத்த முயன்ற சேவல் சண்டையை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸார் மற்றும் சேவல் சண்டையை நடத்த முயன்றவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, ஜனவரி 16

கோவையில் அனுமதியின்றி நடத்த முயன்ற சேவல் சண்டையை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸார் மற்றும் சேவல் சண்டையை நடத்த முயன்றவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பெரிய கடை வீதி அருகேயுள்ள மாகாளியம்மன் கோவில் வீதியில், விவேகானந்தர் பேரவை சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு சென்ற பெரிய கடை வீதி போலீஸார் அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டையைத் தடுத்து நிறுத்தினர். 

இதனால், இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸார் சமரசப்படுத்தியதையடுத்து, சேவல் சண்டை தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...