அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் : சீறிப்பாயும் காளைகள்

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜனவரி 16

ஜல்லிக்கட்டு தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் வீரவிளையாட்டு என உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டையொட்டி 1000-த்திற்கும் மேற்பட்ட காளைகள் அலங்காநல்லூர் வந்துள்ளன. முன்னதாக, 1,241 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. இதற்காக 10 மருத்துவ குழுக்கள் உடல் பரிசோதனை செய்துள்ளனர். அதேபோன்று காளைகளை 12 கால்நடை மருத்துவ குழுக்களும் பரிசோதித்தனர். 

இதைத்தொடந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அலங்காநல்லூர் வருகை தந்து ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலாவதாக வந்த முனியாண்டி கோயில் காளைக்கு சிவப்பு கம்பள பரிசு வழங்கப்பட்டது. அதன்பின் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையருக்கு முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல, சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ரசித்து பார்த்தனர். 

பின்னர், நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஜல்லிக்கட்டை தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பார்த்து வருகின்றனர். இது தமிழகத்திற்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த பெருமை. வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டாக நாம் கருதுகிறோம். காளைகளை துன்புறுத்திடாமல் தங்களது குழந்தைகளை போல் உரிமையாளர்கள் வளர்த்து வருகின்றனர். என்றார். 

”ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்து முடிவு செய்யப்படும்” எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார். முன்னதாக விழா மேடையில் அவர் பேசுகையில், பல தடைகளை உடைத்து சட்டப் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு இருக்கும் வரை ஜெயலலிதாவின் புகழ் இருக்கும், என்றார்.

இதனிடையே, அலங்காநல்லூரில் காளையர்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு மணிநேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அறிவித்தனர். உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...