விண்ணைத் தொடும் அளவிற்கு டீசல் விலை கிடுவிடு உயர்வு

டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி 16




டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.65.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை அதிகரித்து வரும் நிலையில், டீசல், பெட்ரோல் விலை இந்தியாவில் கடுமையாக உயர்ந்துள்ளன. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு லிட்டர் 61.88 (டெல்லி) ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது, ரூ.71.27 -க்கு ஒரு லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் 2014-க்கு பிறகு, பெட்ரோல் விலை முதல்முறையாக இந்த விலையை எட்டியுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இடங்களில் இன்று பெட்ரோல் விலை 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு 14 முதல் 16 காசுகள் வரை அதிகரித்துள்ளது. தற்போது பெட்ரோல், சென்னையில் ஒரு லிட்டர் ரூ. 73.89 காசுகளாகவும், கொல்கத்தாவில் ரூ.74-ஆகவும், மும்பையில் ரூ. 79.15-க்கும் விற்கப்படுகின்றன. டீசல் விலை கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ. 64.54 ஆகவும், மும்பையில் ரூ.65.9 ஆகவும், சென்னையில் ரூ. 65.23 -க்கும் விற்கப்படுகின்றன. 

இந்த கிடுகிடு விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் தினமும் மாற்றியமைத்து வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...