பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கோடப்மந்து கால்வாய் : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என எதிர்பார்ப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நீலகிரி, ஜனவரி 16

நீலகிரி மாவட்டம் உதகை மையப்பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாயை பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்று சொல்லக்கூடிய மாவட்ட நிர்வாகம், கால்வாயை மீட்டெடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமா..? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் தொட்டபெட்டா செல்லும் மேல்கோடப்மந்து பகுதியில் இருந்து நகரின் மையப்பகுதி வழியாக படகு இல்ல ஏரியில் கலக்கிறது கோடப்மந்து கால்வாய். சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தக் கால்வாய் ஓடுகிறது. இதன் ஓரத்தில் உள்ள வீடுகளில் இருந்தும், சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் தினந்தோறும் வீசும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தனியார் விடுதிகள், காட்டேஜ்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இந்தக் கால்வாயில் கலக்கிறது. 



இதனையடுத்து, கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 4.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கோடப்மந்து கால்வாய் தூர்வாரப்பட்டது. இந்நிலையில் அவ்வப்போது தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு கோடப்மந்து கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்னும், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் ஆக்கிரமித்துள்ளன. 



கடந்த பல மாதங்களாக வெறும் கண் துடைப்பிற்காக மட்டுமே இந்தக் கால்வாயை தூர்வாரப்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பிளாஸ்டிக் ஃப்ரி (Plastic Free) என்ற திட்டத்தில் தடம்பதித்துள்ள நீலகிரி மாவட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கழிவுகளை விரைந்து அகற்றி, கோடப்மந்து கால்வாயை மீட்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...