புற்றுநோய் சிகிச்சைக்கு இனி சென்னை செல்ல தேவையில்லை: கோவை அரசு மருத்துவமனையிலேயே புற்றுநோய் மையம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 17

கோவை அரசு மருத்துவமனையில் இன்று மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைத் துறை செயல்பட்டு வருகிறது. இங்கு 40-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை தினங்களில் நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்

வாரந்தோறும் திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வெளி நோயாளிகளுக்கான புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு பிரத்தியேகமாக மண்டல புற்றுநோய் மையம் கோவை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 



இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புற்றுநோய் துறையின் தலைவர் டாக்டர். ஏ. சுரேஷ் வெங்கடாச்சலம் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலா ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்ட இந்த திட்டத்தின் முதற்கட்டமாகக் கோவை அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை இன்று காலை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். அசோகன் திறந்து வைத்தார். 

இதில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவ இயந்திரங்கள், ஸ்கேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட உள்ளன.

நாளை முதல் வெளி நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடத்தில் நடைபெறும். இங்கு மாணவர்களுக்கான கருத்தரங்க கூடம் மற்றும் அறுவை சிகிச்சை கூடம் ஒன்றும் உள்ளது. படிப்படியாக ஒவ்வொரு வசதியாக அந்த கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும்.

கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நீலகிரி, திருப்பூர், கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

இன்னும் 6 மாத காலத்தில் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பெற்று இந்த துறை மிகச்சிறப்பாக செயல்படும். இனி புற்றுநோய் அறுவை சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையிலேயே செய்து கொள்ள இந்தத் துறை உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...