வீரமணியின் தலைக்கு பரிசு அறிவித்த சக்திசேனா இந்துமக்கள் இயக்கத் தலைவர் : நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர்.

கோவை, ஜனவரி 17

வீரமணியின் தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று கூறிய சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் திராவிடர் கழகத்தினர் இன்று புகார் அளித்தனர். 



திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அண்மையில் இராமாயணத்தையும், பகவத்கீதையையும், தீயிலிட்டு எரிப்பதற்கு நாள் குறிப்போம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. வீரமணியின் அறிக்கையை தொடர்ந்து, அவரது தலையை எடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று சக்திசேனா இந்து மக்கள் இயக்கதின் நிறுவனத்தலைவர் அன்புமாரி துண்டறிக்கை மற்றும் போஸ்டர் வாயிலாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், அன்புமாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திராவிடர் கழகத்தினர் புகார் மனு அளித்தனர். ஏற்கனவே இந்து தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் அன்புமாரி மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத தைரியத்தில், தற்போது மிரட்டல் விடுத்து இருப்பதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...