நீட் தேர்வு கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்தையும் பரிசீலித்து தயாரிக்க மத்திய அரசு முடிவு

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜனவரி 18

மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான தகுதி நுழைவுத்தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்திள்ளது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேசிய தகுதி நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களால்கூட, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிவதில்லை. தற்போது வரை நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே தயார் செய்யப்பட்டு வருகின்றன. 

பல மாநிலங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடத்திட்டங்களில் வேறுபாடுகள் உள்ளன. இதனால் மாநில பாடத்திட்டங்களில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனைப் போக்க மாநில பாடத்திட்டங்களையும் நீட் கேள்வித்தாளில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மனித வள அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கும்போது, அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்களையும் கணக்கில் கொள்ளவிருப்பதால் இனி மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்குப் பின்னடைவு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இந்தத் திட்டத்தினால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைய வாய்ப்பு உள்ளது. 

ஆனால், மாநில பாடத்திட்டங்களை வைத்து கேள்வித்தாள் தயாரிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக கேள்வித்தாளை மத்திய அரசு தயாரிக்கப்போகிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...