திட்டமிட்டபடி 25-ம் தேதி ரிலீஸாகிறது ”பத்மாவத்”: 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

ஜனவரி 18

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர், சென்சாரின் தலையீட்டுக்கு பின்னர் படம் பத்மாவத் என்ற பெயர் மாற்றத்துடன் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால், படத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. இதனால், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இப்படத்திற்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து, தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி இப்படம் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும ரிலீஸாகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...