திருமண ஆசைகாட்டி ஆண்களை ஏமாற்றிய நடிகையை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டார்.


கோவை, ஜனவரி 18

திரைப்படப் பாணியில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த நடிகை உட்பட நான்கு பேரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி இன்று உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் அழைத்து சென்று சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையைச் சேர்ந்த பாலமுருகன் (27) என்ற மென்பொருள் பொறியாளர் ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்காக இணையத்தில் பதிவு செய்திருந்த அவரை கோவையைச் சேர்ந்த சுருதி (21) என்பவர் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர், தனது தந்தை துபாயில் தொழில் செய்து வருவதாகக் கூறி அறிமுகமாகி உள்ளார். அலைபேசியில் காதல் வளர்த்த பாலமுருகன் இந்தியா வந்த போது அவருடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அப்போது பல லட்சம் ரூபாயை பாலமுருகனிடம் பெற்றுக்கொண்ட சுருதி பின்னர் அவரிடம் தொடர்புகளை துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த பாலமுருகன், சுருதி மீது கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது சுருதியின் உண்மையான பெயர் மைதிலி என்பதும் திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளதும் கண்டறிந்தனர். மேலும் இவர், போலியான குடும்ப உறுப்பினர்களைக் காட்டி இதேபோல பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வேலுசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரையும் அழைத்துசென்ற சைபர் கிரைம் போலிசார் அவர்களிடம் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



இதனிடையே, ஏற்கனவே கடந்த ஆண்டு ஸ்ருதியால் பாதிக்கப்பட்ட நாமக்கல் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரும் வழக்கு விசாரணையை பார்க்க நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளிக்கையில், மேட்ரிமோனியல் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை கவர்ந்து ஏமாற்றுவதை ஸ்ருதி வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதுவரை ரூ. 80 லட்சம் வரை தான் ஏமாந்துள்ளேன். இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. என்றார். 

இதையடுத்து சுருதி, அவரது அம்மாவாக நடித்து வந்த சித்ரா (48), அப்பாவாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ் (38), சுபாஷ் ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார் இன்று கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி வேலுசாமி, குற்றம்சாட்டப்பட்டவர்களை வரும் 25-ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...