அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு : போக்குவரத்து துணை ஆணையர் தகவல்

அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 18

அவினாசி சாலையில் கூடுதலாக 4 சிக்னல்கள் அமைக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவினாசி சாலை முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. 

இந்த சாலையில், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 

இதனால், நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் அவினாசி சாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 

அதே நேரத்தில், விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அவினாசி சாலை சித்ரா சிக்னலுக்குப் பிறகு சின்னியம்பாளையம் பகுதியில் தான் சிக்னல் உள்ளது. இதற்கு இடைப்பட்ட தூரத்தில் விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் புதிய சிக்னல்கள் அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், "அவினாசி சாலையில் ஆய்வு மேற்கொண்ட போது சின்னியம்பாளையம் பகுதி அருகே அதிக விபத்துக்கள் நடப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, சித்ரா பகுதியில் இருந்து சின்னியம்பாளையம் பகுதிவரை புதிதாக நான்கு சிக்னல்கள் வரை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் புதிய சிக்னல்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். மேலும், பேரிகார்டுகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட அறிவுறுத்தியுள்ளோம். இதனால் 300 மீட்டர்களுக்கு அப்பால் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பேரிகார்டு இருப்பது தெரியும்" என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...