விமானம் போல் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதி

கோவை அவினாசி சாலையில் அதிகாலை நேரங்களில் விமானம் போல அதிவேகமாகச் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை, ஜனவரி 19

கோவை அவினாசி சாலையில் அதிகாலை நேரங்களில் விமானம் போல அதிவேகமாகச் செல்லும் ஆம்னி பேருந்துகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்திலிருந்து சென்னை, திருச்சி, தூத்துக்குடி, நாகபட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பெங்களூர், திருவனந்தபுரம், திருப்பதி உள்ளிட்ட மற்ற மாநிலங்களின் மாவட்டங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பட்டதாரி இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கோவையில் இருந்து தொழில் தொடர்பாகவும், வேலை நிமித்தமாகவும் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று வரவும் இந்த ஆம்னி பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

கோவை கணபதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் செல்ல அவினாசி சாலை வழியாக இந்த பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. அதிகாலை நேரங்களில் போக்குவரத்து குறைவாக இருப்பதால் அவினாசி சாலையில் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ள இந்த சாலை ஓரத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆம்னி பேருந்துகள் விமானம் போல வேகமாக இச்சாலையில் செல்வதாக புகார் கூறும் மக்கள் சில சமயங்களில் சாலையைக் கடக்கவே உயிர் பயம் வருகிறது என குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து பொதுமக்களில் ஒருவர் கூறுகையில்:- "அதிகாலை நான்கு முதல் ஆறு மணி வரை இச்சாலையில் வாகனங்கள் குறைவாக தான் இயங்கும். இதனால் கோவை மாநகரத்திலுள்ள பெரும்பாலான மக்கள் இச்சாலை ஓரத்தை நடைபயிற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். அதிக சத்தத்துடன், கண் கூசும் வகையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்தியவாறு ஆம்னி பேருந்துகள் மிகவும் வேகமாகச் செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்துடனேயே சாலையோரத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. காவல்துறையினர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் கூறுகையில்:- "ஆம்னி பேருந்துகளின் வேகத்தை கண்காணித்து அதனை கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இருநாட்களாக மேற்கொண்ட சோதனையில் 20-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

அதேபோல் முகப்பு விளக்குகளில் அதிக வெளிச்சம் வராமல் இருக்க ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...