வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்வபுரம் தேவேந்திர வீதியில் வசித்து வந்தவர் இராமாயி அம்மாள் (77). கடந்த 9-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனர்.

தொடர்ந்து, சுண்டாக்காமுத்தூர் சாலை, புட்டுவிக்கி பாலம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது மகன் சேகர் பாபு (27) என்பதும், மூதாட்டி கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகர் பாபு-வை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...