அரசு அறிவித்த ஊதியம் வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வருவாய் அதிகாரியிடம் மனு

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 19

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.



திருப்பூர், கோவை மாவட்டத்தில் 35,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 90 சதவிகிதம் பேர் கூலியின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27 சதவிகிதம் மற்றும் 31 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க ஆணையிட்டது.

இருப்பினும் தற்போது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததால் 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3000 விசைத்தறி கூடங்கள் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தங்களது குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமலும் வறுமையில் சிக்கியுள்ளது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 300 கோடிக்கு மேலான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...