ஜனவரி 28-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

கோவை, ஜனவரி 19

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 

பச்சிளம் குழந்தைகள் போலியோ நோயாக் தாக்கப்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மருந்து கடந்த 1995- ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதியில் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. 

இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது :- 

பொதுவாக சொட்டு மருந்து என்பது பிறந்து ஒன்றரை மாதம் ஆன குழந்தைகள் முதல் 5 வயதான குழந்தைகள் வரை கொடுக்கப்படுகிறது. 

ஆனால், போலியோ சொட்டு மருந்து ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்தாகும். இதை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த சொட்டு மருந்து தொடர்பாக பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க, மருந்து வழங்கிய அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும். 

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மருந்தாகவெர் உள்ளது. 

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...