பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் : டிடிவி ஆதரவாளர் செந்தில் பாலாஜி

அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.


கோவை, ஜனவரி 20

அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக அரசு உயர்த்தி உள்ள இந்தப் பேருந்து கட்டண உயர்வால் பேருந்தை பயன்படுத்தும் ரூ. 2 கோடி மக்கள் பேருந்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களின் சேவை துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை அரசு வழங்கவில்லை.

மேலும், இந்தக் கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு செயல்படவில்லை. ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவோம். தனிக்கட்சி துவங்கும் முயற்சிகளில் எதுவும் தற்போது டிடிவி தினகரன் ஈடுபடவில்லை. மேலும், நீதிமன்றத்தில் அதிமுக அம்மா என்ற பெயரில் இயங்க அனுமதி கேட்டு உள்ளார். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் தினகரன் தலைமையில் போட்டியிட்டு வெல்வோம். 

டீசல் விலை உயர்வை அடிப்படையாக வைத்து டிக்கெட் விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு என வந்தால் கூவத்தூர் பழனிசாமியின் அரசு வீட்டிற்கு செல்லும். கூவத்தூர் பழனிச்சாமி மாமியார் வீட்டிற்கு செல்வார். என்றார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...