அப்பல்லோவின் போலி மருந்து சீட்டைத் தயாரித்த மூன்று பேர் கோவையில் கைது

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 20

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடை ஒன்றிற்கு சென்ற மூன்று வாலிபர்கள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பாரஜரஜதாஸ் கையெழுத்து இடப்பட்ட மருந்து சீட்டை கொண்டு மாத்திரை வாங்க முற்பட்டனர். அந்த மருந்து சீட்டில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் இடம்பெற்றிருந்தது.

அந்த மருந்து சீட்டில், அப்பல்லோ மருத்துவமனையின் பெயர், மருத்துவர் பெயர் மற்றும் கையெழுத்து இருந்தது. ஓடிசாவில் இருந்து இங்கு மருந்து வாங்கவேண்டியதன் அவசியம் என்ன..? என்று சந்தேகித்த மருந்துக்கடை ஊழியர்கள், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), ஜவஹர் (19) மற்றும் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள், போலி மருந்து சீட்டு மூலம் போதை மருந்துகளை பெற முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...