பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.



திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், போக்குவரத்து துறையில் நஷ்டம் வருவதற்கு தமிழக அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதே காரணம். ஆட்சியில் குழப்பம், ஊழல்களால் தான் போக்குவரத்து துறையில் இந்த நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை மக்கள் மீது திணிப்பது சரியான நடவடிக்கையல்ல. 

சாமானிய மக்களால் இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த முடியாது. தமிழக அரசு இதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். என்றார். 

மேலும், போக்குவரத்து துறையில் இந்த நிலை ஏற்பட்டதற்கு தி.மு.க. காரணம் என்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியனின் குற்றச்சாட்டை மறுத்து அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தை நடத்தி் சரி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியின் போது பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது கிடையாது. 

டெல்லியில் மருத்துவ மாணவர்கள் மரணம் கவலை அளிக்கிறது. இரண்டு மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கக்கூடியது. சரத்பிரபுவின் உடலில் காயம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...