பேருந்து கட்டண உயர்வுக்கு தி.மு.க.,வே காரணம்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட நிலுவை தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 20

தி.மு.க., ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட நிலுவை தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு ரூ. 1.17 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், விவசாயிகளின் கடந்த முப்பது ஆண்டுகால கோரிக்கையான நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கான கோரிக்கையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதனை முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு நிறைவேற்றி, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருவதற்கு உதாரணம். மேலும், பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 6 மாத காலத்தில் நாரயணசாமி நாயுடு மணி மண்டபம் கட்டி முடிக்கப்படும். 

தி.மு.க,. ஆட்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறு ஒரு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதால், இதுவரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை கொடுக்க முடியாமல் உள்ளது. தி.மு.க., ஆட்சி காலத்தில் வைத்து போன நிலுவை தொகையை, போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களை விடக் குறைவு. என்றார். 

இதனையடுத்து, வையம்பாளையம் பகுதியில் 1.80 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...