மது போதையில் பிரச்சனை : செங்கல் சூலை தொழிலாளி படுகொலை

கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

கோவை: கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூரை அடுத்த மாங்கரை பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூலையில் வேலை செய்து வருபவர்கள் முத்துகுமார், ராஜேந்திரன், ஈஸ்வரன். இவர்கள் அதே செங்கல் சூலையில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர். இந்நிலையில், மூவரும் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினர். அப்போது, மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

பிரச்சனையில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், ராஜேந்திரனை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில், ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து, தகவலறிந்த துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...