தீ விபத்து குறித்து அவசரக் கால மீட்பு குழுவினர் நடத்திய பயிலரங்கு

கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.

கோவை: கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவினர் தீ விபத்தை கையாள்வது குறித்து ஒருநாள் பயிலரங்கை நடத்தினர்.

கோவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த பயிலரங்கில் கோயம்புத்தூர் அவசரக் கால மீட்புக் குழுவை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நான்காவது முறையாக நடைபெறும் இந்த பயிலரங்கில் வெவ்வேறு விதமான தீ விபத்துகளை கையாள்வது மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து தன்னார்வலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.



சூழலியல் ஆர்வலரான முகம்மது சலீம் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு வனப்பரப்புகளில் தீ விபத்து ஏற்படுவதால் சூழலியல் சக்கரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.



பி.எஸ்.ஜி. குழுமத்தின் பாதுகாப்பு அதிகாரி கலந்து கொண்டு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை பயிற்சிகளை தன்னார்வலர்களுக்கு அளித்தார்.



Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...