மாவட்ட ஆட்சியரிடம் லாரிப்பேட்டை பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு

கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.


கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லாரி புக்கிங் ஏஜெண்ட் அலுவலகம், பஞ்சர் கடை ஒர்க்‌ஷாப் என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். 1976-ம் ஆண்டு தங்களுக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கிய போது 120 கடைகள் இருந்தன. தற்போது, 220 கடைகளுக்கு மேல் அதிகரித்து 1,500-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.

லாரிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பழைய மார்கெட்டுக்கு கொடுத்ததின் காரணமாக இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.



உக்கடம் பகுதியில் இயங்கி வரும் பழக் கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கு லாரிப் பேட்டையில் இடம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் பழங்கள் கோவைக்கு வருகின்றன. மேலும், செட்டிபாளையம் பகுதியில் 25 ஏக்கரில் இடம் ஒதுக்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. அதில், அனைத்து வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....