காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதித்தால் தற்கொலை செய்வோம்: அய்யாக்கண்ணு

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்தினால் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், இல்லையெனில், தற்கொலை செய்வோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "10 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும், ஆனைமலை நல்லாறு திட்டத்தை 9-ம் தேதிக்குள் நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். கெயில் எரிவாயு மற்றும் உயர்மின் கோபுரங்களை விவசாய நிலங்கள் வழியாக அமைக்கக் கூடாது. விவசாயிகள் அனுமதியின்றி விவசாய நிலங்களில் நுழையக் கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்காவிடில், டெல்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம். முடியாவிடில் தற்கொலை செய்வோம்," என்றார்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...