நாராயன், நாராயன் : சர்ச்சையில் சிக்கிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது.

பாலியல் பலாத்காரம் வழக்கில் சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு ஐ..சி.சி. சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. 

ராஜஸ்தான், குஜராத் என உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த ஆசாராம் பாபு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இன்று குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, பத்திரிக்கையாளர் ப்ரதிக் சின்ஹா என்பவர் பிரதமர் மோடியுடன் ஆசாராம் பாபு இருக்கும் பழைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) ட்விட்டர் பக்கத்தில் பிரதிக் சின்ஹாவின் பதிவு ‘நாராயன் நாராயன்’ என்ற தலைப்புடன் பகிரப்பட்டிருந்தது. இதனைக் கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதற்கு பலரும் கிண்டலாக பதில்களையும் அளித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்னர் ஐ.சி.சி ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. ட்விட்டர் கணக்கை கையாளும் நபர் தவறாக அந்த வீடியோ பதிவை பகிர்ந்து இருக்கலாம் என எண்ணிக்கொண்டாலும், ஐசிசி தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. கிரிக்கெட் நிர்வாக குழு டுவீட் நீக்கப்பட்டிருந்தாலும், டுவீட் ஸ்கிரீன் ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...