குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்திய காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து காட்டு யானைகள், வீடுகளின் சுவர்களை இடித்து சேதப்படுத்தியதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதையொட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறும் யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை அழித்து நாசப்படுத்தி வருகிறது. ஆனால், அண்மை காலமாக நகரையொட்டியுள்ள பகுதிகளுக்குள் யானைகள் உலா வரத் துவங்கியுள்ளதும், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீட்டின் சுவர்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகரையொட்டியுள்ள சமயபுரம் பகுதியில் புகுந்த யானைகள் அங்கிருந்த கருப்புசாமி மற்றும் செல்வராஜ் என்பவர்களின் வீடுகளின் சுவர்களை இடித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றன. ஆனால், அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பிய காரணத்தினால், சாலையைக் கடந்த யானைகள் பவானி ஆற்றுப்பகுதிக்குள் நுழைந்தது. யானைகளின் தொடர் அச்சுறுத்தலால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறது.

மாலை நேரமாகியதும், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதால் வீட்டிற்குள்ளேயே முடங்கி விடுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். தற்போது, இந்த வீடுகளையும் யானைகள் இடித்து தள்ளுவதால் செய்வதறியாது தவிப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, நெல்லிமலை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும், யானைகளால் தங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....