கோவை ரயில்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை நிறுத்த தனிவசதி

கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை : கோவை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக வாகனம் நிறுத்த தனியாக இட வசதி செய்யப்பட்டு வருவதாக சேலம் கோட்டம் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மத்திய ரயில்நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, மாற்றுத் திறனாளிகள் தனியாக வாகனங்கள் நிறுத்த வசதிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



தற்போதுள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒருபுறம், அதாவது ரயில்நிலைய முன்புற வாசல் அருகே மட்டும் இடவசதி தரப்பட்டிருந்தது. தற்போது, நிறுத்துமிடத்தின் இருபுறங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் வரும் மாற்றுத்திறனாளிகள் அவற்றில் இருந்து இறங்கி எளிதாக ரயில்நிலையத்தின் உள் செல்ல வசதியாக, ரயில்நிலைய முன்புற வாசல் அருகே தங்கள் வாகனங்களை நிறுத்தவும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது, பணிகள் நடைபெற்று வரும் காரணத்தால், பணிகள் நிறைவுற்றவுடன், அதற்கான குறியீட்டுப்பலகைகள் அந்தந்த இடங்களில் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...