கோவை மத்திய சிறையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: கைதி மாரடைப்பால் மரணம்

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மத்திய சிறையில் மாரடைப்பு காரணமாக மேலும் ஒரு கைதி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு, சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள், தண்டனை காலம் முடிவதற்குள், சிறையிலேயே மரணம் அடைந்து வரும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 5-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளனர். சிறையில் மருத்துவமனை வசதிகள் போதுமான அளவில் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று காலை மேலும் ஒரு கைதி மாரடைப்பினால் மரணம் அடைந்துள்ளார். மடத்துக்குளம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து கடந்த 2010-ம் ஆண்டு மடத்துக்குளம் பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த அவர், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

சிறைச்சாலையில் ஒருவருக்கு இரவில் மாரடைப்பு ஏற்பட்டால் போதுமான மருத்துவர் இல்லாததால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து பாதுகாப்புக்கு காவலர்கள் வந்த பின்புதான் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்ல முடியும். ஆனால், சிறைத்துறையின் இந்த காலதாமதத்தால் தான் இறப்புகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. 

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...