இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய உத்தரவு

சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை: இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது போலீசார் இந்தச் சட்டத்தை முதலில் பின்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதையும், கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதையும், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், இருசக்கர வாகனங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படுவதால் இரவு நேரங்களில் பிற வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகவும், எனவே எல்.இ.டி விளக்குகள் பொருத்துவதை தடுக்க வேண்டும் என போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக அவ்வப்போது முறையான வாகன சோதனை நடத்தவும், அது குறித்த அறிக்கையை வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...