தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும்- சி.ஐ.டி.யு.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

கோவை: தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் கூறியுள்ளார்.

 

அரசு போக்குவரத்து சங்க ஊழியர் மாநாடு உக்கடத்தை அடுத்த கோட்டைமேடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் அ.சவுந்திரராசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சட்டசபையில் நடைபெற்ற போக்குவரத்து தொடர்பான மானிய கோரிக்கையில் முறையான எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தவோ அல்லது தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றாத வகையில் மானிய கோரிக்கை அறிவிப்புகள் உள்ளது. 

பேருந்துகள்

தமிழகத்தில் மிக மோசமான நிலையில் இயங்கி வரும் 16 ஆயிரம் பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது. அதை மாற்ற அதிக நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசு அதனை செய்யாமல் நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு முன்பு ஏற்கனவே கொண்டு வந்த இதுபோன்ற திட்டம் வெற்றி அடையவில்லை. இதில், அனைத்து தொழிற்சங்கம் சார்பாக கூட்டம் கூட்டி போராட்டம் அறிவிப்பு வெளியிட உள்ளோம். நடத்துனர் இல்லா பேருந்து அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்.

நடத்துனர் இல்லா பேருந்து

சிக்கனம் என்ற பெயரில் நடத்துனர் இல்லா பேருந்து இயக்குவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மோட்டார் வாகன சட்டப்படி நடத்துனர்கள் இல்லாமல் பேருந்துகளை இயக்க முடியாது. 50 ஆயிரம் சிறு குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாக அரசே அறிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ள நிலையில் வேலை வாய்ப்பினை உருவாக்க தொழிற்சாலைகள் உருவாக்கி வேலை வாய்ப்பினை அரசு உருவாக்க வேண்டும்.

கட்டண உயர்வால் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பட்ஜெட்டில் 10 ஆயிரம் பேருந்துகளுக்கான தொகையை ஒதுக்கினால் தான் பேருந்து சேவை சிறப்பாக இருக்கும்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...