நீலகிரி மலை ரயில் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டம்

நீலகிரி: நீலகிரி மலை ரயில் மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது.

நீலகிரி: நீலகிரி மலை ரயில் மற்றும் அம்மாவட்டத்திலுள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுற்றுலாவை மேம்படுத்த ஈர்க்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

மலை ரயில்







கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நீலகிரி மலை ரயிலில் பயன்படுத்தி வந்த என்.எம்.ஆர்-87 என்ற பெட்டி தற்போது தரமுயர்த்தப்பட்டுள்ளது. கோவை- பெங்களூர் இடையே இயங்கும் உத்ய் எக்ஸ்பிரஸ் போல நவீன முறையில் இந்த பெட்டியும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.1.8 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. 



உதகை, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களை சிறப்பு மிக்க ரயில்நிலையங்களாக மாற்றும் வகையில் அங்கு இலவச வை-பை வசதி, மலை ரயிலின் சிறப்பை விளக்கும் பொருட்கள் விற்பனை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், உதகை ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிக்குள் உணவகம் போன்ற அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டது. 



சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து பல்வேறு வசதிகளையும் மேம்படுத்த தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

கடந்த கோடை விடுமுறையின் போது 56 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் ரூ.28 லட்சம் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...