தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும்: கோவையில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேச்சு

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவை: தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும் என்று வேளாண் பல்கலையில் 17-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் பேசியுள்ளார்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் நடைபெறும் உலக தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது. வேளாண் பல்கலை, உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் மாநில திட்டக்குழு இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். 



இந்த மாநாட்டில், அண்ணா பல்கலை.,யின் முன்னாள் துணை வேந்தர் பத்ம ஸ்ரீ அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழை இணையத்துடன் இணைக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகின்றன. இந்த கட்டுரைகளை தமிழ் இணையத்துடன் இணைத்தால் அது தமிழ் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழ் மொழி தற்போதைய தொழில்நுட்பத்தோடு வளர்ச்சியடைய வேண்டும். கடந்த 1980-ம் ஆண்டு முதல் இதற்காக செயலாற்றி வருகிறோம்.

தமிழ் மொழிக்கான பிரத்தியேக தேடுதளம் ஒன்றை அமைக்கும் போது, விக்கிப்பீடியாவில் தமிழ் முதல் மூன்று மொழிகளில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பல்வேறு மென்பொருள் நிறுவனங்களில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அவர்கள் வித்தியாசமான சிந்தனைகள் கொண்டவர்கள் என்று மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன் பேசுகையில், "தற்போது பல்வேறு மென்பொருள் கட்டுமான நிறுவனங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மென்பொருட்களில் தமிழ் மொழியினை நிறுவதல் தொடர்பான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்த பின் கட்டாயமாக தமிழ் இணைய பயன்பாட்டாளர்கள் அதிகரிப்பார்கள்." என்றார். 



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...