திருப்பூரில் பட்டப்பகலில் சாலையோரங்களில் செல்லும் சாய்க்கழிவு நீர்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்: அதிகாரிகளின் அலட்சியத்தால் அனுமதி பெறாமலோ செயல்படும் சாய ஆலைகள் சாலையோரங்களிலேயே சாயக்கழிவு நீரை திறந்துவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் ஏராளமான சாய ஆலைகள் அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆற்றோரங்களில் அனுமதி பெறாமல் செயல்படும் சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை ஆற்றில் கலந்து விடுகின்றனர். 

இதனால் ஆற்று நீர் எவ்வித உபயோகமின்றி பாழாகியுள்ளது. இதன் ஒருபகுதியாக அங்கேரிபாளையம்-நல்லாற்றின் ஓரமாக செயல்படும் சாய ஆலைகள் உள்ள பகுதியில் பட்டப் பகலிலேயே சாயக்கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது காண்போரை அதிர்ச்சியடைய வைத்தது.



ஆற்றின் ஓரமாகவே சாயக்கழிவு நீர் சென்ற காரணத்தால், பகல் நேரத்திலேயே சாய ஆலையினர் ஆற்றில் கழிவு நீரை கலக்க துணிந்து விட்டனர் என கூறிய பொதுமக்கள், இதுபோன்ற அனுமதி பெறாமல் இயங்கி வரும் பட்டன், ஜிப் டையிங் போன்ற நிறுவனங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடானது தீவிரப்படுத்தப்பட்டால் மட்டுமே ஆற்றில் சாய்க்கழிவு நீரை கலக்கும் செயலை தடுக்க முடியும் என்றும், நல்லாறு, நொய்யலாறு போன்றவற்றை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...