குளத்தில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே நீச்சல் தெரியாமல் குளத்தில் குளிக்க சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமாரனந்தபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கௌதமன் என்பவர் மகன் திலிபன் (17). இவர், தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வந்தார். அதேபகுதியில், வசிக்கும் லாரி ஓட்டுநர் நல்லதம்பி என்பவரது மகன் பரத் (12) அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். 

விடுமுறை தினமான இன்று திலிபன், பரத் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து மாணிக்காபுரம் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நால்வரும் நீரினுள் இழுக்கப்பட்டுள்ளனர். இதில், பயந்து போன சிறுவர்கள் அலறியுள்ளனர். அவர்ளது சத்தத்தைக் கேட்ட அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினர். ஆனால், அதற்குள் திலிபனும், பரத்தும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து, விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் இருவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...