தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி: உதகையில் ஆ.ராசா பேட்டி

நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.

நீலகிரி: தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.



உதகை நகர தி.மு.க., சார்பில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்களை வேண்டுமென்றே இழுத்து மூடும் வேலைகளில் பா.ஜ.க., அரசு செய்து வருகிறது. அதைத் தட்டி கேட்க தைரியம் இல்லாத அரசு தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது.

2 ஆயிரம் தொழிலாளர்களை கொண்டு ராணுவ பொருட்களை உற்பத்தி செய்து வரும் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையை செப்டம்பர் மாதத்திற்குள் இழுத்து மூடும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள அ.தி.மு.க.,வின் இரண்டு எம்.பி.,க்களும் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

எனவே, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இத்தொழிற்சாலை தொடர்ந்து நடத்த பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.



அடுத்து தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் உதகையில் இயங்கி வந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் அதி நவீன மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் பொம்மலாட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தமிழக ஆட்சியாளர்களை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...