தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறு தானிய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. மேலும், மானாவாரி பயிராகவும், ஊடு பயிராகவும் விவசாயிகள் தானிய உற்பத்தி செய்து வந்தனர். இவ்வாறு விளைவிக்கும் சிறு தானியங்களான ராகி, சோளம், கம்பு, மக்காச்சோளம், அவரை, துவரை ஆகியவற்றிற்கு தற்போது உரிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள், வேதனையடைந்துள்ளனர்.



இதனால், சிறுதானியங்கள் உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் சூழல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மக்காச்சோளம், கம்பு, சோளம் ஆகிய செடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அதில் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் 50 ஆயிரம் வழங்க வேண்டும், விளைவிக்கும் சிறுதானிய பயிர்களை அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...